
இனியவளே!
உன்
விழிக்கதவு
திறந்தபோதல்லாம்
நான்
இன்னொருமுறை
பிறப்பெடுத்தேன்!
எந்தத்தாவணி!
மழைபடிந்த
என் கேசத்தை!
தொட்டுத்துடைத்ததோ?
அந்தத்
தாவணியில்
சவமாகக்கிடக்கவும்
சம்மதிக்கிறேன்!

பார்த்தவுடன்
மனதினில்
உதித்தது
நீயடி!
பனிவிழும்
மலரினில்
பருகிய தேனடி!
பள்ளி நாட்களில்
பதிந்து விட்ட
உன்னை
கிள்ளி எறிய
இயலவில்லை!
துள்ளித்திரிந்த
நாட்களில்...
துணையாய்
வந்தவளே!
நீ
அள்ளிக் கொடுத்த
அன்பை ...
வெள்ளி நிலவின்
வீதியில்
விட்டுவிட்டேன்!
உனக்காக
ஒரு ரோஜா!
உன்
கூந்தலிலிருந்து
நழுவிய ரோஜா!
பாதுகாக்கிறேன்
பல
ஆண்டு காலமாய்!
சில
ஆண்டு கால
நினைவுகளால்!