

இது
காதல் கடிதம்
என்று
காயப்பட்டுவிடாதே !
என்
கனிவான தோழியே !
நெஞ்ச அலைகளின்
நெருஞ்சிமுள்
விளையாட்டு !
குத்தினால்
ரத்தம் !
குலவினால்
முத்தம் !
குறிஞ்சிமலரே !
உன்னைக்
கண்டநாள் முதல்
உனக்கு
என்
இதயத்தில்
பூச்சூடி
பொட்டு வைத்து
அழகு பார்க்கிறேன் !
பட்டுவிடக்கூடாது
அந்த
பவளமலர்
என்ற
பரிதவிப்பால் !
பார்த்தவிழி
பார்த்தபடி
நிற்க !
நீர்த்தவிழி
வேர்த்தபடி
கக்க !
உன்
விழிகளில்
விலாசம்
தேடித்திரியும்
காதல் பறவை நான் !
சின்னத் தாமரையே !
செந்தூரத் தேன்மலரே !
சிந்திய
ரத்தமும்
முந்திய
யுத்தமும்
உன்
முகம் பார்க்கவே !
விடியும் வரை
காத்திருந்தாலும்
வடியும்
கண்ணீர்த் துளியில்
உன்
வண்ண முகம்
பார்த்திருப்பேன் !
மனம் இருந்தால்
சொல்லிவிடு !
மனம் இல்லையேல்
மன்னித்துவிடு !


