திங்கள், 15 நவம்பர், 2010

காதல் கடிதம் !



இது
காதல் கடிதம்
என்று
காயப்பட்டுவிடாதே !
என்
கனிவான தோழியே !

நெஞ்ச அலைகளின்
நெருஞ்சிமுள்
விளையாட்டு !
குத்தினால்
ரத்தம் !
குலவினால்
முத்தம் !

குறிஞ்சிமலரே !
உன்னைக்
கண்டநாள் முதல்
உனக்கு

என்
இதயத்தில்
பூச்சூடி
பொட்டு வைத்து
அழகு பார்க்கிறேன் !

பட்டுவிடக்கூடாது
அந்த
பவளமலர்
என்ற
பரிதவிப்பால் !

பார்த்தவிழி
பார்த்தபடி
நிற்க !
நீர்த்தவிழி
வேர்த்தபடி
கக்க !
உன்
விழிகளில்
விலாசம்
தேடித்திரியும்
காதல் பறவை நான் !

சின்னத் தாமரையே !
செந்தூரத் தேன்மலரே !
சிந்திய
ரத்தமும்
முந்திய
யுத்தமும்
உன்
முகம் பார்க்கவே !

விடியும் வரை
காத்திருந்தாலும்
வடியும்
கண்ணீர்த் துளியில்
உன்
வண்ண முகம்
பார்த்திருப்பேன் !

மனம் இருந்தால்
சொல்லிவிடு !
மனம் இல்லையேல்
மன்னித்துவிடு !

ஞாயிறு, 14 நவம்பர், 2010

கவலை !

கவலை கொள்ளாதீர்கள் ! காரணம் நெருப்பு உயிரற்ற உடலை எரிக்கிறது ! கவலையோ மனிதனை உயிரோடு எரிக்கிறது !

சனி, 6 நவம்பர், 2010

நீ மட்டும் தூரத்தில் !




இதயநிலா!...: காதல் கவிதைகள் !: "
நீயும் நானும்
ஒன்றாய்ப்
பார்த்த
வானம் !

ஒன்றாய்க்
கேட்ட
கானம் !

ஒன்றாய்
விளையாடிய
மைதானம் !

ஒன்றாய்க்
குளித்த
ஓடை !

ஒன்றாய்க்
குதித்த
தாத்தாவீட்டுத்
திண்ணை !

ஒன்றாய்ப்
படித்த
பள்ளி !

ஒன்றாய்
நடந்து வந்த
ஒத்தையடிப்
பாதை !

ஒன்றாய்
நனைந்துவந்த
பொதிகை
மலைச்சாரல் !

ஒன்றாய்
அமர்ந்திருந்த
ஆலமரத்தின்
அடிக்கிளை !

ஒன்றாய்
ஊஞ்சல் கட்டி
ஆடிய
ஒற்றைப்
புளியமரம் !

ஒன்றாய்
ரசித்த
மலைக்கோவில் !

ஒன்றாய்
நீந்திப்
பழகிய
குளக்கரை !

ஓராயிரம்
கனவுகளை
வளர்த்துவிட்ட
உன்
ஓரவிழிப்பார்வை !

எல்லாம்
என்
பக்கத்தில்
நீ மட்டும்
தூரத்தில் !