


இதயநிலா!...: காதல் கவிதைகள் !: "
நீயும் நானும்
ஒன்றாய்ப்
பார்த்த
வானம் !
ஒன்றாய்க்
கேட்ட
கானம் !
ஒன்றாய்
விளையாடிய
மைதானம் !
ஒன்றாய்க்
குளித்த
ஓடை !
ஒன்றாய்க்
குதித்த
தாத்தாவீட்டுத்
திண்ணை !
ஒன்றாய்ப்
படித்த
பள்ளி !
ஒன்றாய்
நடந்து வந்த
ஒத்தையடிப்
பாதை !
ஒன்றாய்
நனைந்துவந்த
பொதிகை
மலைச்சாரல் !
ஒன்றாய்
அமர்ந்திருந்த
ஆலமரத்தின்
அடிக்கிளை !
ஒன்றாய்
ஊஞ்சல் கட்டி
ஆடிய
ஒற்றைப்
புளியமரம் !
ஒன்றாய்
ரசித்த
மலைக்கோவில் !
ஒன்றாய்
நீந்திப்
பழகிய
குளக்கரை !
ஓராயிரம்
கனவுகளை
வளர்த்துவிட்ட
உன்
ஓரவிழிப்பார்வை !
எல்லாம்
என்
பக்கத்தில்
நீ மட்டும்
தூரத்தில் !
மிகவும் அருமை, அழகு நண்பரே
பதிலளிநீக்குநண்பர் குருவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
பதிலளிநீக்குsuper pass!
பதிலளிநீக்கு