சனி, 6 நவம்பர், 2010

நீ மட்டும் தூரத்தில் !




இதயநிலா!...: காதல் கவிதைகள் !: "
நீயும் நானும்
ஒன்றாய்ப்
பார்த்த
வானம் !

ஒன்றாய்க்
கேட்ட
கானம் !

ஒன்றாய்
விளையாடிய
மைதானம் !

ஒன்றாய்க்
குளித்த
ஓடை !

ஒன்றாய்க்
குதித்த
தாத்தாவீட்டுத்
திண்ணை !

ஒன்றாய்ப்
படித்த
பள்ளி !

ஒன்றாய்
நடந்து வந்த
ஒத்தையடிப்
பாதை !

ஒன்றாய்
நனைந்துவந்த
பொதிகை
மலைச்சாரல் !

ஒன்றாய்
அமர்ந்திருந்த
ஆலமரத்தின்
அடிக்கிளை !

ஒன்றாய்
ஊஞ்சல் கட்டி
ஆடிய
ஒற்றைப்
புளியமரம் !

ஒன்றாய்
ரசித்த
மலைக்கோவில் !

ஒன்றாய்
நீந்திப்
பழகிய
குளக்கரை !

ஓராயிரம்
கனவுகளை
வளர்த்துவிட்ட
உன்
ஓரவிழிப்பார்வை !

எல்லாம்
என்
பக்கத்தில்
நீ மட்டும்
தூரத்தில் !

3 கருத்துகள்: