யாருக்குப்
பிடிக்கும் இந்த
அழுகை ?
அதனால்
அழாதீர்கள் !
அழுகை
ஆயுளைக்
குறைக்கும் !
அழுகை
ஆற்றலை
அழிக்கும் !
அழுகை
ஆண்மையை
ஒழிக்கும் !
அழுகை
உங்கள்
ஒரு காசுக்
கடனைக்கூடக்
குறைக்காதே !
அதனால்
அழாதீர்கள் !
யாருக்குப்
பிடிக்கும்
இந்தப்
புலம்பல் ?
அதனால்
புலம்பாதீர்கள் !
இளஞனே !
இரும்பு
ஒடிக்கும்
நரம்பு
உனக்கு -நீ
புலம்புவதும்
வீண்தானே !


