செவ்வாய், 7 டிசம்பர், 2010

உயிர் குடித்துப் போனவள் !

இளமை பூத்துக் 
குலுங்குகின்ற 
பருவத்தில்தான் 
எத்தனை ! எத்தனை ! 
வண்ணக்கனவுகள் ! 
 அந்நாளில் 
எனக்குப் பதினெட்டு ! 
நீயோ பருவ மொட்டு ! 
பிரியமானவளே ! 
நான் உன்னைப் 
பார்த்திருக்கக்கூடாது ! 
பார்த்திருந்தாலும் 
பேசியிருக்கக்கூடாது ! 
எங்கேயோ பிறந்த நீ 
எங்கேயோ பிறந்த 
என் உள்ளத்தில் 
எத்தனை காயங்களை 
ஏற்படுத்திவிட்டாய் ! 
 காதல் என்றால் 
கசப்பான வார்த்தையென 
நினைத்திருந்தேன் ! 
உன்னைப் பார்க்கும் வரையில் ! 
ஆனால் -நீ 
சிறகில்லாமல்
பறக்கும் வித்தையை 
என் இதயத்திற்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
 
கண்களால் 
பேசும் கலையை 
என் விழிகளுக்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
ஆண்டுவிழா மேடையில் 
காற்றிலே மிதந்துவந்த 
கவிதையாய் ...
அழகுமலர் நீ 
ஆடவந்தாய் ! 
தளிர்மேனி குலுங்க ! 
தண்டுக்கால்கள் தாளமிட ! 
மலர்க்கரங்கள் அசைய !  
வந்ததே என் 
தங்கச்சிலை ! 
தந்ததே எழில் சிந்தும் 
புது இன்பக்கலை ! 
அப்பப்பா ! 
எத்தனை பாவங்கள் ! 
எத்தனை அபிநயங்கள் ! 
ஒவ்வொரு அசைவிலும் 
என் உயிர் குடித்துப்போனாய் ! 
வீடுவந்த பின்னும் 
விடிய விடிய 
என் கண்ணுக்குள் ஆடி 
நெஞ்சுக்குள் குடிபுகுந்தாய் ! 
உன்னை மட்டுமே சுற்றிப் 
பறக்கும் வண்டானதே ! 
என் நினைவுகள் ! 
எரிமலையைக் 
குளிரவைக்கும் 
உன் ஈரப் பார்வை ! 
மின்சாரம் அறுந்து விழுந்து 
இருண்டு கிடக்கும் 
இரவில் ! 
நிலவொளியில் 
எப்போதாவது 
தலைகாட்டும் 
உன் ஆசைமுகம் !  
எப்போதும் 
நான் பார்த்திருக்க 
வரம் ஒன்று தருவாயா ? 
என் வடிவான பேரழகி !

1 கருத்து: