வெள்ளி, 10 டிசம்பர், 2010

கருவிழிக்குள் வசிப்பவளே !



அன்பு படர்ந்த

மலர்க்கொடியே !

என்
ஆயுள் காதலியே !


மணக்கும்
அரும்பாக

இனிக்கும்
கரும்பாக

குறும்பு மொழி பேசி
என்
நெஞ்ச இரும்பை
எறும்பாக்கிப்
போனவளே !

மதுமலரே !
மரிக்கொழுந்தே !
மல்லிகைப்
பூச்சரமே !
கலைமானே !
மலைத்தேனே !
பனி இதழே !
உன்னைப்
பருகாமல்
சருகானதே
நெஞ்சம் !

என்
கண்கள்
உன்னைத்
தேடித்தேடி
ஏமாந்த
நிமிஷங்களில்...
என்
விரல்கள்
உன்
படங்களைத்
தடவிப்பார்த்து
ஆறுதல்
கொள்கின்றன
காதலி !

விட்டு விட்டுத்
துடிக்கும்
இதயம்
நீ
விட்டுப்பிரிந்ததால்
தவிக்கிறதே !

காந்த ஊசி
எப்போதும்
வடக்கு நோக்கியே
நிற்பதுமாதிரி
என்
கண்களும்
உன்னை நோக்கியே
தவமிருக்கிறது
காதலி !

தூக்கம்
காணாத
காற்றைப்போல
என்
இதய மாடத்தில்
இரவும் பகலும்
உலவிக்கொண்டே
இருக்கிறது
உன் உருவம் !

என்
இருவிழியின்
கருவிழிக்குள்
வசிப்பவளே !

உன்
நினைவுகளை
அறுத்தெறிந்துவிட்டு
தூக்கச்சமுத்திரத்தில்
நான்
நீந்தும்போதும்
என்
பக்கத்தில்
மிதந்துகொண்டே
இருக்கிறது
உன்
முகம் !

சிரித்து மயக்கும்
உன்
ரோஜா இதழ்களில்
சத்தான முத்தமிட்டு
கூந்தல் கலைத்து
உன்
குங்குமப்பூ மார்பில்
குடியிருக்க
நான்வருவேன் !

தணியாத
காதலோடு
தனியாகத்தவிக்கும்
உன்
காதலன் ...

2 கருத்துகள்: