வெள்ளி, 9 செப்டம்பர், 2011

இதயத்தோடு பேசுகிறேன் !

மணிக்கணக்காய் போதனை செய்வதைவிட ஒரு கணப்பொழுதேனும் உதவிசெய் ! பிரியும்போது இனிப்பான வார்த்தைகள் பேசு மறுபடியும் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் சாத்தியம் இல்லாமல்கூட இருக்கலாம் ! அன்புக்கு ஒரு கால்காசு மதிப்புகூட இல்லைஎன்று நீ எண்ணலாம் ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்கமுடியும் ! கொஞ்சநாள் பிரிவு கொஞ்சவைக்கும் நீண்டநாள் பிரிவோ நெஞ்சுக்குள் நெருப்பை வளர்த்துவிடும் ! பாசம் என்னும் மொழியை பார்க்க இயலாதவர் பார்க்கமுடியும் பேச இயலாதவர் பேசமுடியும் கேட்க இயலாதவர் கேட்கமுடியும் பாசமும் பரிவும் இரட்டைக்குழந்தைகள் ! அன்பு இல்லாத மாளிகை மிருகங்களைக்கூட மிரளவைக்கும் இருண்ட குகைதானே ! மணம் வீசும் மல்லிகையை நீ வேறு பெயரிட்டு அழைத்தாலும் அதன் மணம் மாறுவதில்லை ! அதைப்போல நீ நல்லவர்களை தீயவர்கள் என்று அழைத்தாலும் அவர்கள் குணம் மாறுவதில்லை ! இன்பத்தின் பிறப்பிடம் ! எழிலின் இருப்பிடம் ! என்பது அவசரப்படுவது அன்று பொறுமையாய் இருப்பதே ! உனது சாதனைகளை சத்தமில்லாமல் சொல் ! ஆனால் உனது குறைகளை ஊரறிய சொல்லிவிடு ! நலிந்தோருக்கு நம்பிக்கை பிறக்கட்டும் ! கேவலம் ! பணம் சம்பாதிப்பதற்காக உயிர் போன்ற ஒழுக்கத்தையும் உயர்ந்த நற்பண்பையும் விலை பேசிவிடாதே ! கல்வி என்பது தெரியாததை தெரியச்செய்வது அன்று ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதே ! என்ற காந்தியின் வார்த்தையை நீ கவனத்தில்கொள் ! நல்லொழுக்கம் இல்லாதவனை வேதப்புத்தகம் மட்டுமே புனிதமாக்கிவிடாது என்ற மூத்தோர் முதுமொழியை மறந்துவிடாதே ! பதவியும் பணமும் வரும்போதுதான் ஒரு மனிதனின் உண்மைக்குணம் வெளிப்படுகிறது அதனால் பார்த்து பதவியில் அமரத்து ! உயர் பதவி என்பது உயர்ந்தோரை மிக உயர்ந்தோராகவும் தாழ்ந்தோரை மிக தாழ்ந்தோராகவும் காட்டுகின்ற காலத்தின் கண்ணாடி ! இளமையில் தந்தையை இழப்பது ! நடுவயதில் பிள்ளையை இழப்பது ! தடுமாறித் தடம் மாறும் வயதில் தாரத்தை இழப்பது ! இம்மூன்று துயரங்களும் மரணமும் ஒன்றுதான் நினைவில்கொள் ! முட்டிக்கொல்லும் யானை ! நாவால் தொட்டுக்கொல்லும் பாம்பு ! சிரித்தே கொல்வான் துரோகி ! இதோ ஒரு உபதேசம் ! உபதேசம் பண்ணாதே ! <\\\\\\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக