புதன், 4 ஆகஸ்ட், 2010

காதல் கிளியே !



யாருக்கும் கட்டுப்படாத
என்
முரட்டு இதயத்தை
நீ எப்படி
குழைத்தெடுத்து
உன் கண்களிலே
அஞ்சனமாய்த்
தீட்டிக்கொண்டாய்!
விழியாலே
மொழிபேசிய
என்
கன்னிமாடக்கிளியே!
உன்
குழிவிழுந்த
கன்னத்தில்
ஒளிந்துகொள்ள
நான்வரவா!
மருதாணிவிரல்களில்
மல்லிகைப்பூ
நான்தரவா!

4 கருத்துகள்: