வியாழன், 28 அக்டோபர், 2010

ஓவியப்பாவை !


ஓவியப்பாவையே!
உன்
நீவிய
கூந்தலில்
ஆவியைத்
தொலைத்துவிட்டு
அலைகின்றேன்
ராப்பகலாய் !

திண்ணையிலே
நீ
இருந்தாய் !
தெருவெல்லாம்
நான்
திரிந்தேன் !

காலம் கிழிக்கும்
உன்
ஞாபகங்கள் !

காவியம் பேசிய
உன்
கால்கொலுசு
மணிகள்!

ஜன்னல்
வழிவந்த
மின்னல்
பார்வைகள்!

இத்தனையும்
இதயக் கிடங்கில்
இன்னும்
பத்திரமாய் !

நீ
என்றும்
நெஞ்சில்
அழியாத
சித்திரமாய்!

2 கருத்துகள்:

  1. அன்பு நண்பா, உங்கள் கவிதையில் சந்தநயம் அருமையாக உள்ளது!!

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் வைகறையின் வாழ்த்துக்கு நன்றி !

    பதிலளிநீக்கு